சினிமா
ஆதிராஜன் இயக்கத்தில் வி.ராஜா, மாளவிகா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அருவா சண்ட’ படத்தின் முன்னோட்டம்.
ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், ‘அருவா சண்ட.’ சமூக புரட்சியை கருவாக கொண்ட கதையம்சம் உள்ள படம், இது. வி.ராஜா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். ‘அருவா சண்ட’ படத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளார்.
‘அருவா சண்ட’ படம் குறித்து அவர் கூறியதாவது: “என்னைப் போன்ற குணச்சித்திர நடிகைகளுக்கு இதுபோன்ற படங்கள் அமைவது, மிகவும் அரிது. சமீபகாலத்தில் நான் கதை கேட்டவுடனே நடிக்க ஒப்புக்கொண்ட படம், இதுதான். விஜய்சேதுபதியுடன், ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அனுபவத்தை இந்த படத்தில் உணர்ந்தேன்.
‘டப்பிங்’ பேசும்போது என்னை அறியாமலே கண்கலங்கினேன். அப்படி ஒரு ‘கிளைமாக்ஸ்’ காட்சி, படத்தில் இருக்கிறது. படத்தை தைரியமாக தயாரித்து, எனக்கு மகனாக-கதைநாயகனாக நடித்துள்ள வி.ராஜா, மேலும் பல சமூக சிந்தனைகளை கொண்ட படங்களை தயாரித்து நடிக்க வேண்டும்” என்றார்.