சினிமா
பிறர் தர வாரா

பிறர் தர வாரா

Published On 2020-10-03 19:06 IST   |   Update On 2020-10-03 19:06:00 IST
ஏ.ஆர்.கே.கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து ஸ்பெஷல் ஆபிசர் வேடத்தில் ஏ.ஆர்.காமராஜ் நடித்து இயக்கும் படம் ‘பிறர் தர வாரா’ படத்தின் முன்னோட்டம்.
ஏ.ஆர்.கே.கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து ஸ்பெஷல் ஆபிசர் வேடத்தில் ஏ.ஆர்.காமராஜ் நடித்து இயக்கும் படம் ‘பிறர் தர வாரா’. இதில் இவருடன் சம்பத் ராம், ருத்ரன், அபு, ஹரி, புருஷ், சேகர், ராஜன், நிவேதா லோகஸ்ரீ, இன்னும் பலர் நடித்துள்ளனர்.

கோவை, பொள்ளாச்சி, கோபி, உடுமலை, ஊட்டி ஆகிய ஊர்களில் இதுவரை படப்பிடிப்பு நடைபெறாத இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. டேவிட் - கோகுல் இருவரும் ஒளிப்பதிவையும், ஹரிபிரசாத் படத்தொகுப்பையும், ஜாக் வாரியர் இசையையும் கவனித்துள்ளனர்.

சிட்டியில் குழந்தைகள் கடத்தல் தீவிரமாகிறது. குழந்தைகளை கடத்துவது யார்? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பதை கண்டறிந்து கைது செய்ய ஸ்பெஷல் ஆபிசரை நியமிக்கிறார் கமிஷனர். ஸ்பெஷல் ஆபிசர் துப்பு துலக்குகிறார். இதன் பின்னால் இருக்கும் பெயரை கேட்டதும் ஆபீசர் அதிர்ச்சி அடைகிறார். யார் அவர்கள்? எதற்காக இதில் ஈடுபட்டார்கள் என்பதை கேட்டதும் இன்னும் அதிர்ச்சி அவருக்கு அதிகமாகிறது. இறுதியில் அவர்களை ஸ்பெஷல் ஆபிசர் பிடித்தாரா இல்லையா என்பதை திருப்பங்கள் நிறைந்து உருவாக்கி வருகிறார்கள்.

Similar News