சினிமா
நோ என்ட்ரி பட போஸ்டர்

நோ என்ட்ரி

Published On 2020-09-18 09:46 GMT   |   Update On 2020-09-18 09:46 GMT
ஆர்.அழகு கார்த்திக் இயக்கத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘நோ என்ட்ரி’ படத்தின் முன்னோட்டம்.
நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘நோ என்ட்ரி’. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் சினிமா கற்ற ஆர்.அழகு கார்த்திக் இயக்கியிருக்கிறார். ஏ.ஸ்ரீதர் தயாரிக்கிறார். உலகிலேயே அதிக மழை பெய்யும் மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியில் முதன் முதலாக படமாக்கப்பட்ட தமிழ்படம் இதுதானாம். இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஆபத்தான மலைப்பிரதேச காட்சிகளையும், அதிக மழை பெய்யும் காட்சிகளையும் சிரபுஞ்சியில், 45 நாட்கள் முகாமிட்டு படமாக்கி உள்ளனர்.



மனித நடமாட்டம் இல்லாத மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில், ஒரு இளம் தம்பதிகள் தங்குகிறார்கள். அங்கே மனிதர்களை வேட்டையாடும் 15 வெறிநாய்களிடம் அந்த தம்பதிகள் சிக்கிக் கொள்கிறார்கள். நர வேட்டையாடும் நாய்களிடம் இருந்து அவர்கள் தப்பினார்களா? அல்லது உயிர் இழந்தார்களா? என்பதை திகிலுடன் சொல்லும் கதைதான், ‘நோ என்ட்ரி’. படத்துக்காக 15 ஜெர்மன் செப்பர்டு நாய்களுக்கு பயிற்சி அளித்து நடிக்க வைத்துள்ளனர்.
Tags:    

Similar News