சினிமா
அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தின் முன்னோட்டம்.
அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஓ மை கடவுளே’. இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. அசோக் செல்வன் கதாநாயகனாகவும், ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சின்னத்திரை புகழ் வாணி போஜன் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருக்கிறார். காதல், பேண்டசி படமாக உருவாகியுள்ள இதில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
படம் பற்றி அஷ்வத் கூறியதாவது: நமது நாட்டில் அதிகரித்துவரும் விவாகரத்துகளுக்கு இந்த படம் ஒரு தீர்வு சொல்வதாக அமையும். நம் வாழ்க்கையில் நடந்து முடிந்த சில விஷயங்களை மாற்றுவதற்கு கடவுள் இரண்டாவது வாய்ப்பு கொடுத்தால் என்ன ஆகும் என்பதை காமெடியாக சொல்லி இருக்கிறோம். படத்தை பார்க்கும் கணவன் மனைவிக்கு புரிதல் அதிகமாகும்’ என்றார்.