சினிமா
சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தின் முன்னோட்டம்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த `நாடோடிகள்' திரைப்படம் 2009-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி இருக்கிறது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ளா இந்த படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார்.
மேலும் பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமுத்திரகனி சிறப்பு தோற்றத்தில் வருகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.