சினிமா
யுவராஜ் இயக்கத்தில் ரக்ஷன், ரித்திகா நடிப்பில் உருவாகி இருக்கும் ’கடலில் கட்டுமரமாய்’ படத்தின் முன்னோட்டம்.
விவசாயிகளையும் அவர்களது தற்போதைய நிலையையும் மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ’கடலில் கட்டுமரமாய்’. யுவராஜ் முனிஷ் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தை முனுசாமி தயாரித்துள்ளார். கதாநாயகனாக ரக்ஷன், கதாநாயகியாக ரித்திகா நடித்துள்ளனர். தயாரிப்பாளர் முனுசாமி பேசும்போது, இப்படம் வரலாறு படைக்கும் திரைப்படமாக இருக்கும்.
இன்றைய சூழலில் விவசாயம் தான் பிரதானம். நம் நாட்டில் தற்போது விவசாயம் செய்வதற்கு தேவையான நிலபரப்பு மிகவும் குறைந்து வருகிறது. அதை வைத்து நாட்டிற்கு தேவையான கருத்துக்களை எளிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்திருக்கிறோம். விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடுவதும் படத்தில் இருக்கிறது’ என்றார்.