சினிமா

செயல்

Published On 2018-05-06 12:23 GMT   |   Update On 2018-05-06 12:23 GMT
சி.ஆர்.கிரியேசன்ஸ் நிர்மலாராஜன் வழங்க, திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிப்பில் தேஜேஸ்வர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செயல்’ படத்தின் முன்னோட்டம். #Seyal
சி.ஆர்.கிரியேசன்ஸ் நிர்மலாராஜன் வழங்க, திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘செயல்’. இதில் அறிமுக நாயகன் ராஜன் தேஜேஸ்வர் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக புதுமுகம் தருஷ் நடித்துள்ளார்.

‘செயல்’ படத்தின் நாயகன் ராஜன் தேஜேஸ்வர் தனது அனுபவம் பற்றி கூறுகிறார்....

“எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்தது. பின்னர் அது வெறியாக மாறிடுச்சி. அப்போது, டைரக்டர் ரவி அப்புலுவை சந்தித்தேன். அவர் ஒரு கதையை சொன்னார். அது எனக்கு ஏற்ற கதையாக இருந்ததால் நடிக்க ‘ஓகே’ சொன்னேன். சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் என் அப்பாவே தயாரிக்க முன் வந்தார். அப்படி ஆரம்பித்த ‘செயல்’ படம் இந்த மாதம் 18-ந் தேதி வெளியாகிறது. விஜய்யை வைத்து ‘ஷாஜகான்’ படத்தை இயக்கிய ரவி அப்புலு 14 வருடத்துக்குப் பிறகு இயக்குகிற படம் இது. இதில் நடிக்கும் பாக்கியம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. இந்த படத்தில் எனக்கு ஆக்‌‌ஷன், காமெடி, லவ் காட்சிகள் இருக்கு. முதல் படத்திலேயே பக்கா கமர்ஷியல் கதை கிடைச்சிருக்கு. யானை பலம் கொண்ட ஒருவனை சாதாரண சராசரியான ஒருவன் மோதி சாய்ப்பது தான் கதை.

இந்த படம் தரமாக வந்திருக்கிறது என்ற நம்பிக்கை அப்பா சி.ஆர்.ராஜனுக்கு வந்துள்ளது. எனவே, அடுத்த படத்தையும் தொடங்கி விட்டார். சமுத்திரகனி உதவியாளர் சாய்சங்கர் இயக்கத்தில் உருவாகும் இதற்கு “குமாரு வேலைக்கு போறான்” என்று பெயர் வைத்திருக்கிறோம்” என்றார்.
Tags:    

Similar News