சினிமா

எங்க காட்டுல மழை

Published On 2018-02-04 10:36 GMT   |   Update On 2018-02-04 10:36 GMT
வள்ளி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் ‘எங்க காட்டுல மழை’. இதில் கதாநாயகனாக புதுமுகம் மித்துன் நடிக்கிறார். நாயகியாக சுருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார்.
வள்ளி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் ‘எங்க காட்டுல மழை’. இதில் கதாநாயகனாக புதுமுகம் மித்துன் நடிக்கிறார். நாயகியாக சுருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார். இவர்களுடன் அப்புக்குட்டி, சாம்ஸ், அருள்தாஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய பாத்திரத்தில் மைலோ என்ற நாய் நடிக்கிறது.

ஒளிப்பதிவு-சூர்யா ஏ.ஆர்,இசை-ஸ்ரீவிஜய், எடிட்டிங்- எல்.ஜஸ்டின் ராய், ஸ்டண்ட்-அன்பறிவ், நடனம்-பாபி ஆண்டனி, ராதிகா, பாடல்கள்- சினேகன், நா.முத்துக்குமார், தயாரிப்பு- சி.ராஜ், இயக்கம்-ஸ்ரீபாலாஜி.

“தொடர்ந்து நல்ல வி‌ஷயங்கள் நடக்கும் போது ‘எங்க காட்டுல மழை’ என்று சொல்வது உண்டு. இது உற்சாகம் அளிக்கும் வார்த்தை. இந்த படத்தில் குடும்பக் கதையை நகைச்சுவை கலந்து கலகலப்பாக சொல்லி இருக்கிறோம்.

‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும்’ என்று சொல்வது உண்டு. அது போன்று விரும்பிய ஒன்று யார் கையில் கிடைத்தது என்பதே கதை. பணம் இல்லாமல் ஆடம்பரமாக வாழும் சென்னை வாசியாக நாயகன் மித்துன் நடித்திருக்கிறார். அது எப்படி? என்பது சுவையான அம்சம். அருள்தாஸ் அமைதியான வில்லனாக மாறுபட்ட வேடத்தில் வருகிறார். நாயகி சுருதிக்கு வித்தியாசமான பாத்திரம். இதில் வரும் மைலோ என்ற நாய் குழந்தைகளை குதூகலப்படுத்தும். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது” என்றார்.

‘எங்க காட்டுல மழை’ விரைவில் திரைக்கு வருகிறது.
Tags:    

Similar News