சினிமா

மேல்நாட்டு மருமகன்

Published On 2017-11-25 12:29 GMT   |   Update On 2017-11-25 12:29 GMT
எம்.எஸ்.எஸ். இயக்கத்தில் ராஜ்கமல் - ஆண்ட்ரீயன் நடிப்பில் உருவாகி வரும் ‘மேல்நாட்டு மருமகன்’ படத்தின் முன்னோட்டம்.
உதயா கிரியே‌ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரித்துள்ள படம் ‘மேல் நாட்டு மருமகன்’.

இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயன் என்னும் வெள்ளைக்கார பெண் நாயகியாக அறிமுகமாகிறார்.

கே.கெளதம் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு வே.கிஷோர்குமார் இசை அமைத்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம்.எஸ்.எஸ். படம் பற்றி கூறிய அவர்....

 

நம் நாட்டு கலாச்சாரத்தின் மீது ஈர்க்கப்பட்ட ஒரு பிரான்ஸ் நாட்டு பெண் நம் நாட்டு இளைஞனை காதலித்து கரம் பிடிப்பதே கதை. படத்தை வெளியிடுவதற்கு பல முறை முயன்றோம். பல தடைகள். அதை தாண்டி டிசம்பர் இறுதியில் வெளியிட உள்ளோம்.

இங்கு மட்டுமல்ல பிரான்சிலும் 30 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது” என்றார்.

Tags:    

Similar News