சினிமா

அருவா  சண்ட

Published On 2017-06-20 01:53 GMT   |   Update On 2017-06-20 01:53 GMT
திருநெல்வேலியைச் சேர்ந்த கபடி வீரர் ராஜா நடிக்கும் கரடு முரடான காதல் கதையான ‘அருவா  சண்ட’ படத்தின் முன்னோட்டம்.
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்‌ஷன் நிறுவனத்தின் சார்பில் வி.ராஜா தயாரிக்கும் படம் ‘அருவா சண்ட’.

இந்த படத்தின் கதை நாயகனாக ராஜா நடிக்கிறார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கபடி வீரர். கதாநாயகி தேர்வு நடைபெறுகிறது. புதுமையான அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், வில்லனாக ஆடுகளம் நரேன் நடிக்கிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, சிங்க முத்து, நெல்லை சிவா, பிளாக்பாண்டி, சின்ராசு, ரஞ்சன், சின்னத்திரை புகழ் சரத், அழகப்பன் ஆகியோர் கூட்டணி அமைத்து காமெடியில் கலக்க இருக்கிறார்கள்.

இது தரண் இசையமைக்கும் 25-வது படம். பாடல்கள் - வைரமுத்து, ஒளிப்பதிவு - சந்தோஷ்பாண்டி, படத்தொகுப்பு - வி.ஜே.சாபு ஜோசப், கலை - ஏ.டி.ஜெ, ஸ்டண்ட் - மிரட்டல் செல்வம், நடனம் - சிவசங்கர், தீனா, தயாரிப்பு - வி.ராஜா.

தமிழ் திரையுலகின் முதல் டிஜிட்டல் படமான ‘சிலந்தி’ படத்தை எழுதி இயக்கிய வரும் ‘ரணதந்த்ரா’, ‘சிலந்தி 2’ படங்களின் இயக்குனருமான ஆதிராஜன் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். படம் பற்றி கூறிய அவர்...

“இது தென் மாவட்டங்களில் நடந்து வரும் ஆணவக்கொலைகளின் பின்னணியில், ஒரு கபடி வீரனின் கரடு முரடான காதல் கதையாக உருவாகிறது. தமிழர்களின் தேசிய அடையாளமான கபடியின் பெருமைகளை உலகறிய உரக்கச் சொல்ல வருகிறது” என்றார்.

‘அருவா சண்ட’ படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்குகிறது.
Tags:    

Similar News