சினிமா

சிலந்தி-2

Published On 2017-05-03 02:37 GMT   |   Update On 2017-05-03 02:37 GMT
பண்பாட்டை மையப்படுத்தும் திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘சிலந்தி-2’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
தென்னிந்திய திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமான ‘சிலந்தி’ படத்தை எழுதி இயக்கியவர் ஆதிராஜன். இவர் தனது டிஜிட்டல் தியேட்டர்ஸ் பட நிறுவனம் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘சிலந்தி-2’.

இதில் விஜய ராகவேந்திரா நாயகனாக நடித்திருக்கிறார். இவர் பிரபல கன்னட ஹீரோ.

ஹரிப்பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு குத்துப்பாடலுக்கு மேக்னா நாயுடு ஆடி இருக்கிறார். இவர்களுடன் சத்யஜித், ரங்கா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இசை-பெ.கார்த்திக், ஒளிப்பதிவு-ராஜேஷ் யாதவ், எடிட்டிங் - ஸ்ரீகாந்த், வி.ஜே.சாபு, பாடல்கள்-சினேகன், நெல்லைபாரதி, ஆதிராஜன், நடனம் - ராதிகா, கலைக் குமார், ஸ்டண்ட் - மாஸ் மாதா.



படம் பற்றி இயக்குனர் ஆதிராஜன் சொல்கிறார்...

கை நிறைய சம்பாதிக்கும் வேகத்தில் நாகரீக மோகத்தில் நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காற்றில் பறக்கவிட்டு.. சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீறி சொல்லும் பெண்களால் ஏற்படும் விபரீத விளைவுகளும் அதனால் உருவாகும் ஆபத்துக்களையும் சொல்லும் கதை.

ரசனையான காதல்.. நாகரீகமான நகைச்சுவை.. அதிரடி சண்டைக் காட்சிகளுடன்.. அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத திரைக்கதையுடன் உருவாகியிருக்கும் திரில்லர் படம் இது.

தமிழ்,கன்னட மொழிகளில் உருவான ‘ரணதந்திரா’ தமிழில்’ அதர்வனம்’ என பெயரிடப்பட்டிருந்தது. தற்போது ‘சிலந்தி-2’ என்ற பெயரில் வருகிறது” என்றார்.

Tags:    

Similar News