சினிமா

என் ஆளோட செருப்பக்காணோம்

Published On 2017-04-27 01:32 GMT   |   Update On 2017-04-27 01:32 GMT
‘ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் தமிழ் - ‘கயல்’ ஆனந்தி - யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘என் ஆளோட செருப்பக்காணோம்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
‘ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படம் ‘என் ஆளோட செருப்பக்காணோம்’.

இதில் அறிமுக நாயகனாக தமிழ் நடிக்கிறார். கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, பாலசரவணன், லிவிங் ஸ்டன், ரேகா, சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ், தளபதி தினேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு- சுக செல்வன்,இசை (பாடல் கள்)-இஷான்தேவ், பின்னணி-தீபன் சக்கரவர்த்தி, படத் தொகுப்பு-மணிகண்டன் சிவகுமார், கலை-என்.கே.பால முருகன், பாடல்கள்- விஜயசாகர், நடனம்- பாலகுமார் ரேவதி, ‘மெட்டி ஒலி’ சாந்தி, தினா, சண்டை பயிற்சி-ஸ்டண்ட் ஜிஎன், தயாரிப்பு- வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- ஜெகன்நாத்.



படம் பற்றி கூறிய இயக்குனர்...

ஒரு அடைமழை மாதத்தில் தொலைந்த நாயகியின் செருப்புகளை தேடி நாயகன் குடையுடன் தன் பய ணத்தை ஆரம்பிக்கிறான். 30 நாட் கள் நடக்கும் இந்த தேடல் பயணத்தில் அவன் சந்திக்கும் வித விதமான மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழ்வில் அந்த செருப்புகளால் ஏற்படும் நிகழ்வுகளின் தொகுப்பே இந்த படம்.

தொலைந்த ஜோடி செருப்புகள் நாயகியை சென்றடைந்ததா? நாயக னையும், நாயகியையும் அவை ஒன்று சேர்த்ததா? என்பதை நகைச் சுவையுடனும், சுவாரசியத்துடனும் சொல்வதே ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ படத்தின் கதை” என்றார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

Similar News