சினிமா

பூம் பூம் காளை

Published On 2017-04-08 11:27 GMT   |   Update On 2017-04-08 11:27 GMT
ஒளிமார் சினிமாஸ் சார்பாக ஜெ.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பூம் பூம் காளை’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
ஒளிமார் சினிமாஸ் சார்பாக ஜெ.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பூம் பூம் காளை’.

இந்த படத்தின் நாயகனாக நடிகை அனுராதாவின் மகன் கெவின் நடித்துள்ளார். கதாநாயகியாக சாரா தேவா நடித்துள்ளார். இவர் ‘சிவலிங்கா’ படத்தின் நாயகிகளில் ஒருவர். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், அப்புக் குட்டி, ‘காதல்’ அருண், சச்சு, கிரேன் மனோகர், அபிநயாஸ்ரீ உட்பட பலர் நடிக் கின்றனர்.

ஒளிப்பதிவு- கே.பி.வேல் முருகன், இசை- பி.ஆர்.ஸ்ரீநாத், பாடல்கள்- எஸ். ஞானகரவேல், படத் தொகுப்பு- யுவராஜ், இயக்கம்- ஆர்.டி. குஷால்குமார்.



படம் பற்றி கூறிய இயக் குனர்....

“காதல் பொய்.. காமம் தான் நிஜம் என்று சொன் னால் உடனே பல பேர் எதிர் குரல் கொடுப்பார்கள். ஆனால் நிதானமாக யோசித்து பார்த்தால் உண்மை புரியும். ‘பூம் பூம் காளை’ படத்தின் மையக் கருத்து இது தான்.

நாயகன், நாயகி இருவரும் திருமணம் முடித்து தேனிலவு செல்கிறார்கள்.. நாயகியோ கணவனுடன் அன்பாக பழகி, அதன்பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபட விரும்புகிறாள்.. நாயகனோ திருமணம் முடிந்த உடனே அது நடப்பது எப்போது என ‘பூம் பூம் காளை’யாக அலை பாய்கிறான்.

இப்படி எதிர்கருத்து கொண்டவர்களின் தேனிலவு நடந்ததா? இல்லையா? என்பதை நகைச்சுவை கலந்து சொல்லும் படம் இது” என்றார்.

Similar News