சினிமா

களத்தூர் கிராமம்

Published On 2017-03-28 06:32 GMT   |   Update On 2017-03-28 06:32 GMT
‘ஏஆர்மூவி பாரடைஸ்’ சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ள ‘களத்தூர் கிராமம்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
‘ஏஆர்மூவி பாரடைஸ்’ சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ள படம் ‘களத்தூர் கிராமம்’.

இந்த படத்தில் கிஷோர் குமார், புதுமுகம் யக்னா ஷெட்டி ஆகியோர் நாயகன் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சுலீல்  குமார், மிதுன்குமார், ரஜினி மகா தேவய்யா, அஜய் ரத்னம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இளையராஜா இசை அமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு- புஷ்பராஜ் சந்தோஷ், படத்தொகுப்பு- சுரேஷ் உர்ஸ், பாடல்கள்-  இளையராஜா கண்மணி சுப்பு, ஸ்டண்ட்- மகேஷ், ஓம் பிரகாஷ், இயக்கம்-சரண் கே.அத்வைத்தன். படம் பற்றி கூறிய அவர்...



“இந்த களத்தூர் கிராமத்தின் கதையை நான் எழுத ஆரம்பித்த உடனே, ராஜாசாரின் இசை தான் இதற்கு மிக சரியாக இருக்கும்  என்பதை முடிவு செய்துவிட்டேன். கதையை முழுவதுமாக கேட்டு, அது பிடித்த பின்பு தான் இளையராஜா சார் எங்கள் படத்திற்கு  இசையமைக்க சம்மதம் தெரிவித்தார்.

போலீசாருக்கும், களத்தூர் கிராம மக்களுக்கும் இடையே நிலவும் பிரச்சினை தான் இந்த படத்தின் கதை கரு. கதாநாயகன்  கிஷோர், இளைஞர், முதியவர் என இரண்டு வேடங்களில் நடித்து இருக்கிறார். 1980-ஆம் ஆண்டுகளில் நடக்கும் சம்பவங்களை  மையமாக கொண்டு உருவாகி இருக்கும் ‘களத்தூர் கிராமம்’ நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும்” என்றார்.

Similar News