சினிமா
லட்சத்தில் இருந்து கோடிக்கு தாவிய நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தனது சம்பளத்தை லட்சத்தில் இருந்து கோடியாக உயர்த்தி இருக்கிறாராம்.
தமிழில் நடிகையாக பிரபலமானவர் பாடுவதிலும் சிறந்தவராம். அந்த நடிகை தற்போது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறாராம். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் பேய் படத்திற்காக தனது சம்பளத்தை ரூ.70 லட்சத்தில் இருந்து 1 கோடி ரூபாய் வாங்கி இருக்கிறாராம்.
இந்த படம் வெளியான பிறகு தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று சொல்லி வருகிறாராம். மேலும் புதிதாக கதை சொல்ல வரும் இயக்குனர்கள் நடிகையிடம் சம்பளம் எவ்வளவு என்று கேட்டால், ஒரு கோடி வேண்டும் என்று கேட்கிறாராம். அதிலிருந்து குறைக்க சொன்னால் டென்ஷன் ஆகி விடுகிறாராம்.