சினிமா
தயாரிப்பாளர்களை புலம்ப வைத்த நடிகை
முன்னணி நடிகை ஒருவரால் படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கேற்க முடியாத சூழல் உருவாகி உள்ளதால் சில படங்கள் பாதியில் சிக்கி தவிக்கின்றன.
இரண்டு பெயர்களை கொண்ட முன்னணி நடிகை ஒருவர், திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வந்தாராம். தற்போது அந்த நடிகை கர்ப்பமாக உள்ளாராம். இது அவருக்கு குட் நியூஸாக இருந்தாலும், அவரை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்களுக்கு சற்று வருத்தத்தை தந்துள்ளதாம்.
அவர் கைவசம் வைத்துள்ள அரை டஜன் படங்களும் பாதியில் நிற்கின்றன. இதனால் படப்பிடிப்பை தொடர முடியாத சூழலில் சில படங்கள் சிக்கி தவிக்கின்றன. இதனால் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகிறார்களாம். சில தயாரிப்பாளர்கள் அந்த நடிகையை நீக்கி விட்டு வேறு நடிகைகளை நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்களாம்.