சினிமா
கிசுகிசு

நெருங்கியவர்களை நம்பி ஏமாந்த நடிகர்

Published On 2021-09-07 14:26 GMT   |   Update On 2021-09-07 14:26 GMT
தமிழ் சினிமாவில் ஒரு சில நல்ல படங்களில் நடித்து பிரபலமானவர் நெருங்கியவர்களை நம்பி ஏமாந்து இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் நல்லவனாக கொண்ட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பெயர் பெற்றாராம். அதன்பின் சில படங்களில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்த நடிகர், தனக்கு உதவியாக ஒரு சிலரை தேர்வு செய்தாராம். அவர்களிடம் கதை தேர்வு செய்யும் பணி, சம்பளம் உள்ளிட்டவைகளை பார்க்க சொன்னாராம்.

ஆனால், அவர்கள் நல்ல கதைகளை எல்லாம் நடிகரின் தகவலுக்கு கொண்டு செல்லாமல் தவிர்த்து விட்டார்களாம். இதனால் நடிகர் பல நல்ல படங்களை இழந்து விட்டாராம். இதை தற்போது அறிந்து அவர்களை நீக்கி விட்டு, தான் ஏமாந்ததை நினைத்து வருந்துகிறாராம்.
Tags:    

Similar News