சினிமா
கைக்கொடுக்காத போட்டோ ஷூட்.... வருத்தத்தில் நடிகை
தமிழ் சினிமாவில் போட்டோ ஷூட் மூலம் மிகவும் பிரபலமான நடிகை, தற்போது ரீச் கிடைக்கவில்லை என்று வருத்தத்தில் இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை, மொட்டை மாடியில் எடுத்த போட்டோ ஷூட் மூலம் மிகவும் பிரபலமானாராம். அதன் மூலம் நடிகைக்கு பல வாய்ப்புகள் குவிந்ததாம். அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளாமல் பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று ரசிகர்களை கவர்ந்தாராம்.
வீட்டை விட்டு வெளியே வந்த நடிகை, அதன்பின் பல போட்டோ ஷூட்டுகளை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டாராம். ஆனால், எதுவுமே மொட்டை மாடி அளவிற்கு வைரலாகவில்லையாம். பணம் அதிகம் செலவு செய்து எடுத்தும் ரீச் ஆகவில்லையே என்று நடிகை வருத்தத்தில் இருக்கிறாராம்.