சினிமா
கவர்ச்சியை நம்பி ஏமாந்து போன நடிகை
கோலிவுட்டில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், கவர்ச்சியை நம்பி ஏமாந்து போய் உள்ளாராம்.
நான்கெழுத்து நடிகை ஒருவர் ஆரம்பத்தில் சிறுபட்ஜெட் படங்களில் நடித்து பிரபலமானார். பெரும்பாலும் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து வந்த அந்த நடிகையிடம், கவர்ச்சி காட்டினால் தான் முன்னணி நடிகர்களுடன் நடிக்க முடியும் என சிலர் ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.
இதை நம்பி கவர்ச்சியில் இறங்கிய அந்த நடிகைக்கு பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும், அத்துடன் பேரதிர்ச்சி ஒன்றும் காத்திருந்ததாம். அது என்னவென்றால், அந்த நடிகையை ஒரு பாடலுக்கு நடனமாட மட்டுமே அழைக்கிறார்களாம். இதனால் கவர்ச்சியை நம்பி ஏமாந்துவிட்டதாக, அந்த நடிகை, தனது திரையுலக நண்பர்களிடம் புலம்பி வருகிறாராம்.