சினிமா
நடிகரின் அழைப்பை கண்டுக்கொள்ளாத நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர், நடிகரின் அழைப்பை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் தற்போது தேர்தலில் மும்முரமாக செயல்பட்டு வருகிறாராம். தேர்தல் முடிந்த பிறகு இளம் இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறாராம். இதற்காக கதாநாயகி தேடுதல் வேட்டை நடைபெற்றதாம். ஆனால், நடிகரோ நான் இன்னும் முன்னணி நடிகை ஒருவரிடம் மட்டும் நடிக்க வில்லை, அவரை ஒப்பந்தம் செய்யுங்கள் என்று சொன்னாராம்.
இதற்காக படக்குழுவினர் நடிகையை அனுகிய போது விரைவில் சொல்லுகிறேன் என்று சொல்லி இருக்கிறாராம். ஆனால், நடிகைக்கு அவருடன் நடிக்க விருப்பம் இல்லையாம். அதனால்தான் பெரியதாக கண்டுக்கொள்ளாமல் இருக்கிறாராம் நடிகை.