சினிமா
இனிமேல் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் - அடம்பிடிக்கும் நடிகை
இனிமேல் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று நடிகை ஒருவர் இயக்குனர்களிடம் அடம்பிடிக்கிறாராம்.
தமிழில் நம்பர் ஒன் நடிகை நடித்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அதிகமாக கவனம் பெற்ற நடிகை, அந்த படத்திற்குப் பிறகு மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டாராம். காரணம் அந்த படத்தில் நடிகை சிறு வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்தாராம்.
அதன்பிறகு நடிகைக்கு தொடர்ந்து குழந்தைக்கு அம்மாவாக நடிக்கவே வாய்ப்பு வருகிறதாம். இதனால் பல பட வாய்ப்புகளை இழந்தாராம். இயக்குனர்களிடமும் இனிமேல் அந்தமாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாராம்.