சினிமா
படப்பிடிப்பு தளத்தில் அடாவடி செய்யும் நடிகை
படப்பிடிப்பு தளத்தில் வாரிசு நடிகை ஒருவர் அடாவடி செய்வதால், தயாரிப்பாளர்கள் சமாளிக்க முடியாம தவிக்கிறாங்களாம்.
சில ஆண்டுகள் ஓய்வில் இருந்த வாரிசு நடிகைக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லையாம். ஆனால் கிடைக்கிற வாய்ப்பில் கூட அவரது அடாவடி தாங்க முடியவில்லையாம்.
எந்த படப்பிடிப்புக்கு போனாலும், கேரவனுக்குள் யாரையும் விடாதே, பத்து பேருக்கு மேல கூடாதே... பத்து நிமிடத்துக்கு ஒரு முறை சானிட்டரி தெளி, காஸ்ட்லியான மாஸ் கொடு என்று ஏகப்பட்ட கெடுபிடி பண்றாராம்.
தங்குற ஓட்டல் அறையில் சின்ன குறை தெரிந்தாலும் உடனே கோவிச்சுக்கிட்டு கிளம்பிடுறாராம். இதனால தயாரிப்பாளர்கள் வாரிசு நடிகையை சமாளிக்க முடியாம தவிக்கிறாங்களாம்.