சினிமா
டோலிவுட், கோலிவுட் என தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டிப்பறக்கும் முன்னணி நடிகை ஒருவர் சொத்துக்களாக வாங்கி குவித்து வருகிறாராம்.
தென்னிந்திய கதாநாயகிகளில் அதிக சம்பளம் வாங்கி வரும் நடிகை ஒருவர் வாங்குகிற சம்பளத்தை எல்லாம் புத்திசாலித்தனமாக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறாராம். சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய 3 மாநிலங்களிலும் சொத்துக்களாக வாங்கி குவித்து வருகிறாராம் அந்த நடிகை.
இதுமட்டுமின்றி வருமான வரி கணக்கு காட்டுவதற்காக சொந்த பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளாராம். வயதாகி வருவதால் நடிகை இவ்வாறு வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறாராம். படவாய்ப்பு இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் பிசினஸ் கைகொடுக்கும் என்ற நோக்கத்தில் அவர் இப்படி செய்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது