சினிமா
நடிகரின் செயலால் படப்பிடிப்பை விட்டு ஓடிய நடிகை
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரின் செயலால் படப்பிடிப்பை விட்டு நடிகை ஒருவர் ஓட்டம் பிடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தற்போது வாரிசு நடிகைக்கு ஜோடியாக நடித்து வருகிறாராம். நடிகர் எப்போதும் ரசிகர்களிடம் நெருக்கமாக இருப்பாராம். அவர்களை கட்டிப்பிடிப்பது, முத்தம் இடுவது என்று இருப்பாராம்.
தற்போது பரவி வரும் வைரஸ் காரணமாக பலரும் சமூக இடைவெளிவிட்டு இருக்கும் நிலையில், நடிகர் மட்டும் இதை பின் பற்றுவது இல்லையாம். இதேபோல் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகி இருக்கிறாராம். இதைப் பார்த்த வாரிசு நடிகை படப்பிடிப்பு விட்டு ஓடி விட்டாராம்.
மற்றவர்களை தொட்டு விட்டு என்னை தொட்டால் நோய் தொற்று வந்து விடும் என்ற பயத்தில் ஓட்டம் பிடித்து விட்டாராம்.