சினிமா
கிசுகிசு

காத்திருந்து ஏமாந்து போன நடிகை

Published On 2020-10-29 00:01 IST   |   Update On 2020-10-29 00:01:00 IST
தமிழில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை, காத்திருந்து ஏமாந்து போய் விட்டாராம்.
தமிழில் சேவலாக வந்த நடிகைக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்ததாம். அதன்பின் தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்த நடிகைக்கு திடீரென்று படவாய்ப்புகள் குறைந்ததாம். பின்னர் கவர்ச்சிக்கு மாறி பட வாய்ப்புகளைப் பிடிக்க ஆரம்பித்தாராம்.

ஒரு சில படங்களில் மட்டுமே வாய்ப்பு கிடைத்ததால், நடிப்பை விட்டு சிலகாலம் விலகி இருந்தாராம். மீண்டும் படவாய்ப்பு பிடிக்க முயற்சிகள் செய்தும் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லையாம். காத்திருந்து ஏமாந்த நடிகை தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டாராம்.

Similar News