சினிமா
கிசுகிசு

அவசரப்பட்டு அரசியல் பேசிட்டமோ என புலம்பும் நடிகர்

Published On 2020-10-22 07:34 GMT   |   Update On 2020-10-22 07:37 GMT
கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ஒருவர், அவசரப்பட்டு அரசியல் பேசிட்டமோ என புலம்புகிறாராம்.
கோலிவுட்டில் படம் ரிலீசாகும் சமயத்தில் அரசியல் பற்றி ஏதேனும் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்துவது ஒரு டிரெண்டாகவே மாறி வருகிறதாம். இப்படி ஒருசில முன்னணி நடிகர்கள் செய்தது அவர்களது படத்தின் புரமோஷனுக்கு பயனுள்ளதாக இருந்ததாம்.

இதை பார்த்த மூன்றெழுத்து வாரிசு நடிகர், சமீப காலமாக தன் பங்கிற்கு அரசியல் பற்றி அதிரடி கருத்துகளை தெரிவித்து வருகிறாராம். இது அவரது படத்திற்கு உதவியாக இருக்கும் என நினைத்த வேளையில், அதுவே பின்னடைவாக அமைந்துள்ளதாம். அப்படத்திற்காக அரசு தரப்பில் இருந்து தரப்பட வேண்டிய சான்றிதழ் இப்போ அப்போ என்று இழுத்தடிக்கிறார்களாம்.

இதனால் அந்த நடிகரின் படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறிதான். அவசரப்பட்டு அரசியல் பேசிட்டமோ என அந்த நடிகர் புலம்புகிறாராம்.
Tags:    

Similar News