சினிமா
3 மாதத்தில் கசந்த காதல்.... ஏமாந்துட்டேன் என்று புலம்பும் நடிகை
சர்ச்சை நடிகையின் காதல் கணவர் மூன்றே மாதத்தில் பிரிந்து சென்றதால், இப்படி நம்பி ஏமாந்துவிட்டோமே என அந்த நடிகை புலம்புகிறாராம்.
சர்ச்சைக்கு பெயர்போன நடிகை ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கெல்லாம் சளைக்காமல் பதிலடி கொடுத்து வந்த அந்த நடிகை, காதல் கணவருடன் ஹாயாக ஒரு டிரிப் போனாராம்.
யார் கண்ணு பட்டுச்சோ தெரியல, கப்பிலாக போன அவர்கள் சிங்கிளாக திரும்பி வந்தார்களாம். உருகி உருகி காதலித்த அந்த நடிகை, தற்போது ஏமாந்துட்டேனேனு புலம்புகிறாராம். குடி குடியை கெடுக்கும் என்பதற்கு உதாரணமாக அமைந்துவிட்டது அந்த நடிகையின் காதல் கதை.