சினிமா
டப்பிங் பேச மறுக்கும் நடிகர்... புலம்பும் படக்குழுவினர்
தமிழில் காமெடி படங்களில் நடித்து பிரபலமாகி தற்போது ஹீரோவாக இருப்பவர் டப்பிங் பேச மறுத்து வருகிறாராம்.
பொதுவாக திரைப்படங்களில் பெரிய நட்சத்திரங்களுக்கான சம்பளத்தில் பாதியை படத்தின் துவக்கத்திலும் மீதியை அவர்கள் டப்பிங் பேசி முடித்த பின்பும்தான் கொடுப்பது வழக்கமாம். உச்ச நட்சத்திரங்களைத் தவிர மற்றவர்களுக்கு இதுதான் நடைமுறையாம்.
டப்பிங் பேசுவதற்கு முன்பாக மொத்தமுள்ள மீதித் தொகையையும் கொடுத்தால்தான் டப்பிங் பேசவே வருவேன் என்று சொல்லி கறாராய் சம்பளத்தை வசூலிக்கும் நட்சத்திரங்களும் திரையுலகத்தில் இருக்கிறார்களாம். அந்த வரிசையில் இப்போது காமெடியில் கலக்கி, ஹீரோவாக நடித்து வருபவர் இணைந்திருக்கிறாராம்.
ஒரு நாள் ‘தலைவலி’.. அடுத்த நாள் ‘காய்ச்சல்’.. மூன்றாவது நாள் ‘மூடு சரியில்லை’ என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி டப்பிங் பேச தவிர்க்கிறாராம் நடிகர். ஏன் இப்படி செய்கிறார் என்று படக்குழுவினர் புலம்பி வருகிறார்களாம்.