சினிமா
கிசுகிசு

தவறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை

Published On 2020-10-17 19:52 IST   |   Update On 2020-10-17 19:52:00 IST
ஒரு படத்தில் நடித்து பிரபலமான நடிகை, தவறு செய்து விட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறாராம்.
ஒரு படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்ற அருவியான நடிகை, அந்த படத்திற்குப் பிறகு காணாமல் போய் விட்டாராம். ஒரு இயக்குனரின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்பட்ட நடிகை, மன அழுத்தம் காரணமாக பல ஊர்களுக்கு சென்று வந்தாராம்.

நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம். அந்த படமும் கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம். தற்போது நடிகை பொது இடத்திற்கு முககவசம் அணியாமல் சென்றிருக்கிறாராம். இதை கேட்டதற்கு கேட்டவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறாராம். இதைப் பார்த்தவர்கள் நடிகை செய்தது தவறு. ஆனால் வாக்குவாதமா என்று பேசினார்களாம்.

Similar News