சினிமா
படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு செல்ல பயப்படும் நடிகர்
தமிழில் முன்னணி நடிகர் ஒருவர் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு செல்ல பயப்படுகிறாராம்.
கடவுள் பெயரை கொண்ட நடிகர் இப்போது, மருத்துவரான படத்தில் நடித்து வருகிறாராம். படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறதாம். தினமும் படப்பிடிப்பு முடிந்ததும் அவர் வீட்டுக்கு போவதில்லையாம். ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்குகிறாராம்.
இதைப் பார்த்த பலரும் நடிகர் வீட்டுக்கு போகாமல் ஓட்டலில் தங்குகிறாரா என்று பலரும் பேசினார்களாம். காரணம் விசாரித்தால், கொரோனாவின் ஆட்டம் அதிகமாக இருப்பதுதான் காரணமாம். குடும்பத்தினரின் நலன் கருதி, முன் எச்சரிக்கையாக வீட்டுக்கு போகாமல் ஓட்டலில் தங்குகிறாராம் நடிகர்.