சினிமா செய்திகள்

என்னை பைத்தியம் என நினைத்தார்கள் -வித்யா பாலன்

Published On 2023-11-28 11:00 GMT   |   Update On 2023-11-28 11:00 GMT
  • டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார்.
  • படத்தில் வித்யா பாலன் நடிப்பு பல்வேறு விமர்சனங்களை பெற்றது.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தி டர்ட்டி பிக்சர். இந்த படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார். அவருடன் இம்ரான் ஹாஸ்மி, நசுருதீன்ஷா உள்பட பலர் நடித்திருந்தனர். இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் படம் வெளியானது. படத்தில் வித்யா பாலன் நடிப்பு பல்வேறு விமர்சனங்களை பெற்றது.


இந்நிலையில் கோவாவில் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. விழாவில் நடிகை வித்யா பாலன் கலந்து கொண்டு அங்கு நடைபெற்ற நேர்காணலில் கலந்துரையாடினார். அதில், தி டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிப்பதற்கு நான் ஆர்வமுடன் இருந்தேன். அந்த கதாபாத்திரத்தை எனக்கு வழங்குவார்கள் என நான் நம்பவில்லை.


மக்கள் என்னால் அந்த கதாபாத்திரத்தை செய்ய முடியும் என்று நினைத்து பார்க்கவில்லை. படத்தில் நான் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது என்னிடம் பெரும்பாலானோர் இது நிச்சயமாக உங்கள் வாழ்க்கையை அழிக்கும் என்றனர். சிலர் எனக்கு பைத்தியம் என்று நினைத்தனர். படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்த போது நான் மகிழ்ச்சி அடைந்தேன். நான் வித்தியாசமான முறையில் முயற்சி செய்து நடிப்பதால் தான் நான் இன்றும் நடிகையாக இருக்கிறேன் என்று கூறினார்.

Tags:    

Similar News