சினிமா செய்திகள்

சமந்தா

சமந்தா படத்தின் ஓடிடி வெளியீட்டிற்கு தடை.. குழப்பத்தில் ரசிகர்கள்..

Published On 2022-11-25 08:26 GMT   |   Update On 2022-11-25 08:26 GMT
  • இயக்குனர் ஹரி- ஹரிஷ் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள திரைப்படம் ‘யசோதா’.
  • இப்படம் வெளியான 10 நாட்களில் உலக அளவில் ரூ.33 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


யசோதா

திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ள இப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


யசோதா

மேலும், 'யசோதா' திரைப்படம் வெளியான 10 நாட்களில் ரூ.33 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், யசோதா திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதாவது, இப்படத்தில் இடம் பெறும் மருத்துவமனை பெயரில் தனியார் மருத்துவமனை ஒன்று இயக்கி வருகிறது.


யசோதா

இந்த மருத்துவமனை நிர்வாகம் தங்கள் மருத்துவமனையின் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் 'யசோதா' படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் ஐதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 'யசோதா' திரைப்படத்தை டிசம்பர் 19-ஆம் தேதிவரை ஓ.டி.டி.யில் வெளியிட தடை விதித்து படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags:    

Similar News