சினிமா செய்திகள்

ரோஜா

null

ரோஜா எடுத்த செல்ஃபி.. வைரலாகும் புகைப்படம்....

Published On 2022-07-04 14:25 GMT   |   Update On 2022-07-04 14:28 GMT
  • பிரதமர் நரேந்திர மோடி வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்.
  • நடிகையும் ஆந்திர மந்திரியுமான ரோஜா பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

ஆந்திரப்பிரதேச மாநிலம் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசு திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் பிரதமர் மோடி புறப்பட்டு செல்லும்போது நடிகையும் ஆந்திர மந்திரியுமான ரோஜா, பிரதமரிடம் செல்ஃபி எடுக்க அனுமதி கேட்டு அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார்.


செல்ஃபி புகைப்படம்

அப்போது ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உடனிருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிரஞ்சீவியும் கலந்து கொண்டார். ரோஜா அவருடனும் செல்ஃபி எடுத்துக் கொண்டார். ரோஜாவின் இந்த செல்ஃபி புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News