சினிமா செய்திகள்

ஞானவேல் ராஜா - எஸ். ஆர். பிரபு

null

அடுத்தடுத்து நடக்கும் ரெய்டு.. அலறும் தயாரிப்பாளர்கள்

Published On 2022-08-02 06:14 GMT   |   Update On 2022-08-02 10:35 GMT
  • வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதலே தயாரிப்பாளர்கள் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
  • தயாரிப்பாளர்கல் அன்புசெழியன், கலைப்புலி எஸ். தாணு ஆகியோரை தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.

திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதலே அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளியான படங்களின் வருமானத்தில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறி இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் பிரபல தயாரிப்பார்களான அன்புசெழியன், கலைப்புலி எஸ். தாணு ஆகியோரின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் காலை முதலே வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபுவுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் லக்‌ஷ்மனன், மன்னார், சத்யஜோதி தியாகராஜன், சீனு உள்ளிட்ட தயாரிப்பாளர்களின் வீடுகளிலும் சோதனை நடைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News