சினிமா செய்திகள்

ஜெயம் ரவி

படத்தை தாண்டிய ஒரு உணர்வாக மாறியுள்ளது பொன்னியின் செல்வன் - ஜெயம் ரவி நெகிழ்ச்சி

Published On 2023-04-27 14:25 IST   |   Update On 2023-04-27 14:25:00 IST
  • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -2.
  • பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ,ஜஸ்வர்யா ராய், திரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் நாளை (ஏப்ரல் 28ம் தேதி) உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


பொன்னியின் செல்வன்

இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மும்பை, பெங்களூர் போன்ற இடங்களில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.


பொன்னியின் செல்வன்

இதில் நடிகர் ஜெயம்ரவி பேசியதாவது, நாளை பொன்னியின் செல்வன் -2 ரிலீஸாக போகிறது. இது அதற்கான சந்திப்பா என்று நினைக்கும் போது எனக்கு அப்படி தோன்றவில்லை. இவ்வளவு பெரிய படத்தை மிகவும் கஷ்டப்பட்டு எடுத்துக் கொண்டு வந்திருக்கிறோம். 150 நாட்களில் இரண்டு பாகங்களை எடுப்பது சாதாரண விஷயம் இல்லை.


பொன்னியின் செல்வன்

அது ஏன் சாத்தியப்பட்டது என்றால் மணி சார் என்ற ஒரு குரு. அவருக்காக நாங்கள் செய்த விஷயம் தான். கை தேர்ந்த நடிகர்களை ஒருங்கிணைத்து அவர் செய்தது பெரிய விஷயம். அதனால் தான் இந்த மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இதை தாண்டி மக்கள் கொடுத்த வரவேற்பு அதை என்றும் மறக்க முடியாது. படத்தை தாண்டிய ஒரு உணர்வாக பொன்னியின் செல்வன் மாறியுள்ளது என்று கூறினார்.

Tags:    

Similar News