சினிமா செய்திகள்
null

அமீரிடம் வருத்தம் தெரிவித்த ஞானவேல்

Published On 2023-11-29 06:11 GMT   |   Update On 2023-11-29 06:20 GMT
  • அமீர்- ஞானவேல் ராஜா பிரச்சனை சினிமா துறையில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • அமீருக்கு ஆதரவாக பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அமீர் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி நடிப்பில் வெளியான படம் பருத்தி வீரன். இந்த பட விவகாரத்தில் இயக்குனர் அமீர் மீது சமீபத்தில் சில குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியிருந்தார்.

அமீர் மீது அவர் கூறிய குற்றச்சாட்டுகள் தமிழ் திரைத்துறையில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஞானவேல் ராஜாவுக்கு இயக்குநர்கள் சமுத்திரகனி, சசிக்குமார், கரு.பழனியப்பன், பொன் வண்ணன் ஆகியோர் கடும் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.



பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்டு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். சில தினங்களாக இந்த பிரச்சனை நீண்டு கொண்டே இருந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அமீருக்கு வருத்தம் தெரிவித்து இன்று காலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

 "பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே "அமீர் அண்ணா" என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன்.  



 ஞானவேல் அறிக்கை

அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி!" என்று கூறியுள்ளார். இந்த அறிக்கை சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Tags:    

Similar News