சினிமா செய்திகள்

இதை வேறு யாராவது சொல்லி இருந்தால் கண்டிப்பாக பண்ணியிருக்க மாட்டேன் - நடிகர் ஆர்யா

Published On 2022-09-03 14:30 GMT   |   Update On 2022-09-03 14:30 GMT
  • இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் படம் கேப்டன்.
  • இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன்'. டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேப்டன்

இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 'கேப்டன்' திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. "கேப்டன்" திரைப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து கேப்டன் படக்குழு மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். கேப்டன் படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், இந்த கதை வேறு யாரும் சொல்லி இருந்தால் கண்டிப்பாக பண்ணி இருப்பேன் என்று சொல்ல முடியாது. இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனுடன் முன்பு பணியாற்றிய அனுபவங்களை வைத்து நான் அவரை நம்பினேன். அவரால் இந்த படம் இயக்க முடியும் என்று நினைத்தேன் அதனால் இந்த படத்திற்கு ஒப்புக் கொண்டேன் என்று நடிகர் ஆர்யா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.


Full View


Tags:    

Similar News