சினிமா செய்திகள்
null
Vairamuthu | இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது வைரமுத்துக்கு அறிவிப்பு
24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு ஞானபீட விருது கிடைக்கிறது
இலக்கியத் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்குவோருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது இந்தாண்டு கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1975ல் எழுத்தாளர் அகிலனுக்கும், 2002ல் ஜெயகாந்தனுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. தற்போது 24 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு இந்த விருது கிடைக்கிறது.
ஞானபீட விருது அறிவிக்கப்பட்ட பின்பு வைரமுத்துவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.