சினிமா செய்திகள்

போதைப்பொருள் விவகாரம்: நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது

Published On 2025-06-23 15:53 IST   |   Update On 2025-06-23 15:53:00 IST
  • அரசு மருத்துவமனையில் ஸ்ரீகாந்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
  • தீங்கிரை என்ற படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் மற்றும் பிரசாத் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.

ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ஸ்ரீகாந்த். அதை தொடர்ந்து ஏப்ரல் மாதம், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, நண்பன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் தினசரி மற்றும் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் திரைப்படங்கள் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அதிமுக எக்ஸ் எம்.எலே பிரசாத் வாக்குமூலம் கொடுக்க அதன் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அரசு மருத்துவமனையில் ஸ்ரீகாந்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் கோகைன் போதைப்பொருள்பயன்பாடு தொடர்பான வழக்கில் மேலும் பல பிரபலங்களுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தீங்கிரை என்ற படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் மற்றும் பிரசாத் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதில் கழுகு புகழ் நடிகரான ஸ்ரீகிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. பிரசாத்திடம் போதைப்பொருளை வாங்கி கடந்த 5 வருடங்களாக பயன்படுத்தி வருவதாக ஸ்ரீகாந்த் விசாரணையில் கூறியுள்ளார்.

பிரசாத் பல பார்டிகளில் கலந்துகொண்டும், பார்ட்டிகள் நடத்தியும் இந்த கோகெயினை பரிமாற்றி உள்ளார். பிரசாத்திற்கு பெங்களூரில் இருந்து போதைப்பொருளை வாங்கி வந்து கொடுப்பேன் என பிரதீப் கூறியுள்ளார். தொடர் விசாரணையில் மேலும் தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் இருந்து போதைப்பொருள் வாங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News