சினிமா செய்திகள்
ஆச்சார்யா ரவி

ஆச்சார்யா பட இயக்குனர் திடீர் மரணம்

Published On 2021-12-28 10:22 GMT   |   Update On 2021-12-28 15:40 GMT
ஆச்சார்யா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் இயக்குனராக அறியப்பட்ட இயக்குனர் ஆச்சார்யா ரவி மாரடைப்பால் காலமானார். ’சேது’ திரைபடத்தில் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரவி, பிறகு விக்னேஷ் நடிப்பில் வெளியான 'ஆச்சார்யா' படத்தை இயக்கினார்.

இத்திரைப்படத்தின் மூலம் ஆச்சார்யா ரவி என்று அறியப்பட்டார். சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். 

இந்நிலையில் இயக்குனர் ஆச்சார்யா ரவி சிகிச்சை பலனின்றி இன்று (28.12.2021) காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News