சினிமா
ஜெய் பீம் படத்தில் ஜோசிகா

ஜெய் பீம் படத்தில் நடித்த சிறுமி பள்ளியிலிருந்து விலக்கப்பட்டாரா?

Published On 2021-11-08 14:46 IST   |   Update On 2021-11-08 14:46:00 IST
ஜெய் பீம் படத்தில் நடித்ததற்காக பள்ளியிலிருந்து சிறுமி ஜோசிகா மாயா விலக்கப்பட்டதாக வந்த செய்திக்கு அவரது தந்தை விளக்கம் அளித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ஜெய் பீம். ஞானவேல் இயக்கிய இப்படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், சிறுமி ஜோசிகா மாயா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். இருளர் பழங்குடியினர் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது. 

தனது வேலை நடிப்பது மட்டும்தான் என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் இருளர் பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக ஒரு கோடி கொடுத்து நிஜத்திலும் தான் ஹீரோ என்று காட்டியிருக்கிறார். 
இந்நிலையில் படத்தில் இருளர் சிறுமியாக நடித்த ஜோசிகா மாயாவிற்கு சினிமாவில் நடித்தத்தால் ஒரு சிக்கல் வந்திருக்கிறது என்று செய்தி பரவியது. அவர் படிக்கும் பள்ளியிலிருந்து அவரை டி.சி.கொடுத்து விலக்கி விட்டார்கள் என்ற தகவல் பரவி வருகிறது. 


தந்தையுடன் ஜோசிகா

இது குறித்து ஜோசிகாவின் தந்தை சக்தியிடம் பேசினோம், இந்த செய்தியில் கொஞ்சமும் உண்மை இல்லை. அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. ஜெய் பீம் படத்தை தொடர்ந்து வெப் சீஸில் அதிதி பாலன் மகளாக நடித்து முடித்திருக்கிறார். ஒரு படத்திற்குக் கேட்டிருக்கிறார்கள். படிப்பும் நடிப்பும் தொடர்ந்து கொண்டிருக்கும் என்றார் சக்தி.
Tags:    

Similar News