சினிமா
டி.ராஜேந்தர் - சிம்பு

சிம்பு படத்தை வெளியிடவிடாமல் கட்ட பஞ்சாயத்து செய்கிறார்கள் - டி.ராஜேந்தர் ஆவேசம்

Published On 2021-10-20 11:31 GMT   |   Update On 2021-10-20 12:18 GMT
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர், செய்தியாளர்களை சந்தித்து சிம்பு பட பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார்.
சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இப்படம் வருகிற நவம்பர் 4ந் தேதி தீபாவளி அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால், நவம்பர் 25ந் தேதிக்கு தள்ளி ரிலீஸ் செய்வதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.



இந்நிலையில், டி.ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, ‘சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தை வெளியிடவிடாமல் கட்டபஞ்சாயத்து செய்கிறார்கள். சிம்புக்கு தொடர்ந்து கொலைமிரட்டல் வருகிறது. மேலும் சிம்புக்கு நெருக்கடி கொடுக்கவே மாநாடு திரைப்படம் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு முன்பு உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம்’என்றார்.
Tags:    

Similar News