சினிமா
சமந்தா

விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா எடுத்த அதிரடி முடிவு

Published On 2021-10-19 03:00 GMT   |   Update On 2021-10-19 03:04 GMT
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர். சமந்தா கவர்ச்சியாக நடிப்பது நாகசைதன்யா குடும்பத்துக்கு பிடிக்கவில்லை என்றும் இதனாலேயே திருமண உறவை முறித்துக் கொண்டார்கள் என்றும் கூறப்படுகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக படங்களில் நடிப்பதை குறைத்திருந்த சமந்தா, விவாகரத்துக்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். 

ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள அவர், தற்போது மேலும் 3 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதில் ஒன்று பாலிவுட் படம். அவர் நடிக்கும் முதல் பாலிவுட் படம் இதுவாகும். 



மேலும் அவர் நடிக்க உள்ள மற்ற இரண்டு படங்களும் சமந்தாவை முன்னிலைப்படுத்தி கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படங்களாக தயாராகின்றன. அதில் ஒரு படத்தை ஷாந்தா ரூபன் இயக்குகிறார். மற்றொரு படத்தை ஹரி, ஹரிஷ் ஆகியோர் இணைந்து இயக்க இருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராக உள்ளன.
Tags:    

Similar News