சினிமா
சுரேகா சிக்ரி

3 முறை தேசிய விருது பெற்ற பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்

Published On 2021-07-16 14:09 IST   |   Update On 2021-07-16 14:21:00 IST
பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமான நடிகை சுரேகா சிக்ரி, 3 முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.
பாலிவுட்டில் கடந்த 1978ம் ஆண்டு வெளியான ‘கிசா குர்சி கா’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுரேகா சிக்ரி. இதையடுத்து ஏராளமான இந்தி மற்றும் மலையாள படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த இவர், 3 முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.

1988ம் ஆண்டு வெளியான 'தமஸ்', 1995ம் ஆண்டு வெளியான 'மம்மூ', 2018-ம் ஆண்டு வெளியான ‘பதாய் ஹோ’ ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.


சுரேகா சிக்ரி

இந்நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேகா சிக்ரி, இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 74. நடிகை சுரேகா சிக்ரியின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News