சினிமா
யாஷ்

கேங்ஸ்டர்கள் நிறைந்திருக்கும் போதுதான் மான்ஸ்டர் வருவார்... கே.ஜி.எப் புதிய அறிவிப்பு

Published On 2021-07-06 14:06 GMT   |   Update On 2021-07-06 14:06 GMT
இந்திய திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கேஜிஎப் 2 படத்தின் புதிய அறிவிப்பை இயக்குனர் பிரஷாந்த் நீல் வெளியிட்டு இருக்கிறார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'கேஜிஎப்' முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது 'கேஜிஎப் 2' இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'கேஜிஎப் 2' டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படம் ஜூலை 16 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் பல மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்படாததால், படம் வெளியாகுமா? வெளியாகாதா? என்று எதிர்பார்ப்புகள் கிளம்பி இருந்தது.

இந்த நிலையில், புதிய வெளியீட்டு தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என்று இயக்குநர் பிரஷாந்த் நீல் அறிவித்திருக்கிறார். அவர், இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் 'தியேட்டர்களில் கேங்ஸ்டர்கள் நிறைந்திருக்கும்போதுதான் மான்ஸ்டர் வருவார். அவர் வரும் புதிய தேதியை விரைவில் அறிவிப்போம்' என்று அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார்.


Tags:    

Similar News