சினிமா
தடுப்பூசி போட்டு வேண்டுகோள் விடுத்த இளம் நடிகை
காதல் கசக்குதய்யா, பள்ளி பருவத்திலே, மாயநதி படங்களில் நடித்த இளம் நடிகை, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நடிகை வெண்பா
அந்த வகையில், காதல் கசக்குதய்யா, பள்ளி பருவத்திலே, மாயநதி படங்களில் நடித்த நடிகை வெண்பா, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். மேலும், அனைவரும் வெகு விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்றும், நம்மை சுற்றி இருக்கும் மக்களுக்கு அதுவே பாதுகாப்பு. கட்டாயம் முக கவசம் அணியுங்கள் என்று சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
Finally! Vaccination done👍 and ellarum please get vaccinated as soon as possible, its "SAFE" for us nd people around us.... Do not delay🙏
— venba (@VenbaOfficial) June 14, 2021
Nd please wear a mask😷🙏#vaccinationdone#wearmask#StayHomeStaySafepic.twitter.com/YPmWMvnXft