சினிமா
ஆர்.கே.செல்வமணி

படப்பிடிப்பில் ஈடுபட மாட்டோம் - ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு

Published On 2021-05-15 15:56 IST   |   Update On 2021-05-15 15:56:00 IST
ஊரடங்கு காலத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 31 ஆம் தேதி வரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் நடைபெறாது என்று ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.



இதனிடயே, இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 31 ஆம் தேதி வரை திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் நடைபெறாது என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

Similar News