சினிமா
கஸ்தூரி

இது என்ன பிக்பாஸ் நிகழ்ச்சி போல இருக்கு... கஸ்தூரி

Published On 2021-05-14 13:07 GMT   |   Update On 2021-05-15 07:09 GMT
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து, அந்த கட்சி வேட்பாளர்கள் விலகி வருவதால், பிக்பாஸ் நிகழ்ச்சி போல் இருக்கிறது என்று கஸ்தூரி கூறியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திடீரென கட்சியில் இருந்து விலகினர். 

அவரை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா கட்சியில் இருந்து விலகுவதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவர் பின் ஒருவராக மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அக்கட்சியை சார்ந்தவர்கள் விலகி வருவதை கலாய்க்கும் விதமாக, நடிகை கஸ்தூரி பதிவு ஒன்றை போட்டுள்ளார். 



அதில் "மதுரவாயில் தொகுதியில் போட்டியிட்ட யூடியூபர் பத்மபிரியா, வேளச்சேரி தொகுதி போட்டியிட்ட சந்தோஷ் பாபு ஆகிய இருவருமே மக்கள் நீதி மய்யம் கட்சியில், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் சேர்ந்தனர். தற்போது இருவரும் விலகி விட்டனர். இது கிட்டத்தட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் எலிமினேஷன் போலவே தெரிகிறது அடுத்த எலிமினேஷன் யார் என்பதை பார்ப்போம் என்று பதிவு செய்திருக்கிறார்.
Tags:    

Similar News