சினிமா
ஆத்மிகா

டூப் போட்டவரை பாராட்டி பரிசளித்த ஆத்மிகா

Published On 2021-01-08 21:28 IST   |   Update On 2021-01-08 21:28:00 IST
தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக வலம் வரும் ஆத்மிகா தனக்காக டூப் போட்டவரை பாராட்டி பரிசளித்து இருக்கிறார்.
நடிகை ஆத்மிகா மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டார். தற்போது புத்தாண்டை முன்னிட்டு ஆத்மிகா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. 

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா நடிப்பில் உருவான நரகாசூரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஆத்மிகா. ஆனால், அந்த படம் தயாரிப்பு தரப்பு பிரச்சனை காரணமாக இன்னமும் வெளியாகவில்லை. அடுத்த வருடம் ரிலீசாகவுள்ள கண்ணை நம்பாதே படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.



இப்போது விஜய் ஆண்டனியுடன் `கோடியில் ஒருவன்’ படத்தில் நடித்துள்ளார். அதில் சண்டைக்காட்சி ஒன்றில், தனக்காக டூப் போட்டவரைப் பார்த்து பிரமித்து, பரிசளித்து அவரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவரைப் பாராட்டி இருக்கிறார்.

Similar News