சினிமா
யாஷ்

டீசர் லீக்கானதால் கே.ஜி.எஃப் படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு

Published On 2021-01-07 16:51 GMT   |   Update On 2021-01-07 16:51 GMT
கே.ஜி.எஃப் 2 படத்தின் டீசர் இணையத்தில் லீக் ஆனதால் படக் குழுவினர் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகி வருகிறது.

கொரோனா நெருக்கடிநிலை காரணமாக இப்படத்தின் பணிகளைத் திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் எழுந்தது. படப்பிடிப்பு பணிகளைத் தொடங்குவதற்கு கிடைத்த அனுமதியையடுத்து, படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை (08.01.2021) வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.



சற்று முன் இந்த டீஸர் இணையத்தில் லீக் ஆனதால், படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக யூடியூபில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த டீசர் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News